Sunday, February 22, 2009

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...”

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...” ஆஸ்கரில் ஒலித்தத் தமிழ் வார்த்தை..
ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!!!!

'Inside Man' என்ற படத்தின் title song-ஆக முதன் முதலில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ‘தையத் தையா' கேட்டபோதே நம்மாள் கண்டிப்பாக ஒரு நாள் ஆஸ்கரில் வருவார் என்ற நம்பிக்கை இன்று உண்மையானது...

”Slumdog Millionare” என்னைப் பொருத்தவரையில் ஏ.ஆர்.ரகுமானின் சிறந்தப் படைப்பு என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அது என்னால் படத்தின் திரைக்கதையமைப்பினால், காட்சிகளோடு ஒன்றிப்போக முடியாததாலும், துண்டு துண்டான பின்னனி இசையினாலும் இருக்கலாம்.. இருந்தாலும் நம்மத் தமிழன் உலகத்தில் உயர்ந்த விருதினால் அங்கீகரிக்கப் படுவது ரொம்ப மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது..

இந்த விருதால் இப்போதைக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.. ‘சக்கரகட்டி, அ..ஆ, அழகியத் தமிழ் மகன், சிவாஜி' போன்ற குப்பைப் படத்துக்கெல்லாம் இசையமைக்க அவருக்கு நேரம் இருக்காது. அப்புறம் சில ஹாலிவுட் படங்களில் அவரது இசையைக் கேட்கலாம்..