Thursday, December 25, 2008

கெராமத்து வெளயாட்டுக்கள் -1

பழமப் பேசி அப்பங்கிட்ட எருக்கம்பூவப் பத்தி பேசிட்டிருக்கும் போது, சிறுசுவகளா இருக்கரப்ப நாமெல்லாம் வெளயாடின வெளயாட்டுகள பத்தி ஒரு பதிவு போடணும்ன்னு சொல்லிட்டிருந்தோம்.

சரி.. நாம வெளயாண்ட வெயாட்டெல்லாம் என்னென்னனு யோசிச்சு, ஆத்தாக்கிட்டயும், தங்கமணிக்கிட்டயும் நோண்டி நோண்டிக் கேட்டு அதெல்லாம் நாமலே எழுதலாம்னு..

இதுவரைக்கும் ஒரு பத்து வெளயாட்டு தேறியிருக்கு. அதுல ஒண்ணொன்னா சொல்லறேன்..கேட்டுக்கோங்க..

நீங்களும் இந்த வெளயாட்டெல்லம் வெளயாடி இருப்பீங்க.. இதெல்லாம் எங்கூருல (கொங்கு நாடு: ஈரோடு: மொடக்குறிச்சி) மாடு மேக்கறப்ப தோட்டந்தொரவுல வெளயாண்டது.. உங்கூருலயும் வெளயாடியிருப்பீங்க.. ஆனா கொஞ்ச வேற மாதிரி இருக்கலாம்.. அதெல்லாம் சொல்லுங்க..

Our Village...


அப்புறம்.. முக்கியமா ‘பழம பேசி' அப்பனுக்கு நன்றி சொல்லிக்க கடமை பட்டிருக்கேன். அவருதான் இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் முன் மாதிரி.


மொத வெளையாட்டு:

1)அஞ்சாங்கல்:

பொதுவாச் சொல்லணும்னா கல்லத் தூக்கிப்போட்டு அடைப்பு (‘') குறிக்குள்ளார உள்ளப் பாட்டச் சொல்லிட்டே கல்லப் பொறுக்கர வெளையாட்டு. கைய்யும் கண்ணும் நல்லா ஒட்டுக்கா வேல செய்யணும். (Hand - Eye Coordination). இது பொதுவா அம்மணிகளோட வெளையாட்டு.
பசங்களும் வெளயாடலாம்.. ஒன்ணும் தப்பில்ல..

தேவையான விளையாட்டுப் பொருட்கள்: 5 கற்கள் (வெங்கச்சாங்கற்கள்).
ஆட்கள்: 2 பேர், அல்லது அதற்கு மேல்.

1: முதலாட்டம் - ‘ஒண்ணாநம்மா ஊசிமேல ஊசி'

அஞ்சு கல்லையும் கையில எடுத்து வீசணும். கல்லெல்லாம் ஒன்னுகொன்னு முட்டாம இருகிறது நல்லது. அதுல ஒரு கல்ல எடுத்து மேல நேரா வீசிப்போட்டு, கீழருக்கற ஏதொருக் கல்ல எடுத்ததுக்கப்புறம் மேல வீசுன கல்லயும் அதே கையில புடிக்கோணும். இப்படியே “ஒவ்வொண்ணா” மத்தக் கல்லையெல்லாம் எடுத்து முடிச்சுட்டா முதலாட்டம் முடிஞ்சது. இதுல எப்பவாவது மேல வீசுன கல்ல புடிக்காம வுட்டாலோ, கீழிருக்கற கல்ல எடுக்காம விட்டாலோ, ஒரு கல்ல எடுக்கும் போது மத்த கல்ல அலுங்கினாலோ (அசைச்சாலோ) ஆட்டம் அடுத்தாளுக்கு. அடுத்தாளும் இதே மாதிரி அஞ்சாட்டத்துக்குல்லார உட்டுட்டா ஆட்டம் உங்களுக்கே மறுபடியும் வரும். நீங்க மறுபடியும் எங்க உட்டீங்களோ அங்கிருந்து மறுபடியும் ஆரம்பிக்கோனும்.

2: ரண்டாம் ஆட்டம் - ‘ரெண்டானம்மா ரத்தினக்கிளி'

மறுபடியும் அஞ்சு கல்லயும் கையில எடுத்து வீசணும். இப்ப நாலு கல்லுக, ரண்டு சோடியா இருந்தா நல்லது. (எல்லாம் ஒரு நேக்குதான். வெளையாட வெளையாடத் தானா வந்துரும்.)
இப்ப சோடியா (அல்லது பக்கம் பக்கமா) இருக்கற நாலு கல்ல வுட்டுட்டு, ஒரு கல்ல எடுத்து வீசிப்போட்டு, ரெண்டு கல்ல ஒட்டுக்கா எடுத்த பின்னாடி மேல வீசுன கல்ல அதே கையில புடிக்கோணும். மொதல்ல சொன்னமாதிரியே, எதயும் வுட்டுரக்கூடாது, மத்த கல்லயும் அலுங்காம எடுக்கணும்.

3: மூணாம் ஆட்டம் - 'மூணானம்மா முத்துச்சரம்'

இப்ப அஞ்சுகல்ல எடுத்து வீசும்போது மூணு கல்லுக ஒட்டுக்கா இருக்கர மாதிரி வீசணும்.
மூணு கல்ல ஒட்டுக்கா எடுத்துட்டு, தனியா இருக்கற ஒரு கல்ல எடுக்கணும். ஒரு கல்ல மொதல்ல எடுத்துட்டு மூணு கல்ல மறுக்காக் கூட எடுக்கலாம்.

4: நாலாம் ஆட்டம் - ‘நாலானம்மா நாகேஸ்வரம்'

இந்தாட்டம் கொஞ்சம் வேற மாதிரி வெளையாடோனும். அஞ்சு கல்லயும் கயில வெச்சுட்டு அதுல ஒரு கல்ல மேல வீசோணும். அந்தக் கல்லு மேல போயிட்டு வரதுக்குல்லார மீதி நாலு கல்லயும் கீழ ஒட்டுக்கா வெச்சுட்டு, மொதக்கல்லப் புடிக்கோணும். அப்புறம் மொத மூணு ஆட்டமாறியே அந்தக் கல்ல வீசிப்போட்டு கீழிருக்கற நாலு கல்லயும் ஒட்டுக்கா
எடுக்கொணும்.

5: அஞ்சாம் ஆட்டம் - ‘அஞ்சானம்மா பஞ்சலிங்கம்'

இது ரொம்ப முக்கியம்மான ஆட்டம். இந்த ஆட்டத்துக்குள்ளாரயே பத்து ஆட்டம் இருக்குது.

5.1: ‘குத்தாலக்க'

இதுல நாலாம் ஆட்டம் மாறியே அஞ்சு கல்லயும் கையில வெச்சுட்டு அதுல ஒரு கல்லத் தூக்கிப்போட்டு, அதே கையில ஆட்காட்டி விரலால சுண்டி கீழ நெலத்தத் தொடணும்.


5.2: ‘கோழிப்பிய்யி'

இது 'குத்தாலக்க' வோட 'ர்ர்ரிப்ப்பீட்ட்டு'

5.3: ‘வெச்செடுப்பேன்'

இதுவும் நாலாம் ஆட்டம் மாறியே அஞ்சு கல்லயும் கயில வெச்சுட்டு அதுல ஒரு கல்ல மேல வீசிட்டு மீதி நாலு கல்லயும் கீழ ஒட்டுக்கா வெச்சுட்டு, மொதக்கல்லப் புடிக்கோணும்.


5.4: 'தப்புக் குப்பு'

இப்ப நாலு கல்லு கீழிருக்கும். ஒரு கல்லு உங்க கையில இருக்கும். இப்ப கையிலிருக்கற ஒரு கல்லத் தூக்கிப்போட்டு ரெண்டு கையாலயும் கீழ நெலத்தத் தட்டணும். அப்புறம் மேல போன கல்லப் புடிக்கோணும்.

5.5: ‘வாரி வளி'

இப்ப கையிலிருக்கற ஒரு கல்லத் தூக்கிப்போட்டு, கீழிருக்கற கல்லையெல்லாம் எடுத்துட்டு வீசுண கல்லப் புடிக்கோனும்.

5.6: 'சிணுக்கு'

ஆட்டத்தோட முக்கியமான கட்டம். போன ஆட்டத்துக்கப்புறம் உங்க உள்ளாங்கைய்ல அஞ்சு கல்லும் இருக்கும். அந்த கல்லையெல்லாம் தூக்கிப்போட்டு பொறங்கையால புடிக்கணும். முடிஞ்சவரைக்கும் கொஞ்சமா புடிக்கிறது நல்லது. ஆனா அதுக்கு முயற்சி பண்ணினா எல்லாக் கல்லயும் உட்டுருவீங்க.. பாத்துக்கொணும். அப்படியே எதயும் புடிக்காம வுட்டுட்டா உடனே ‘மொட்டக்கையில மோரூத்து' - ன்னு சொல்லிட்டா எதிராளி மறுபடியும் கல்லெல்லாம் உங்க கயில குடுக்கொணும். ஆனா நீங்க சொல்லறதுக்கு முன்னாடி எதிராளி ‘தூ' சொல்லீட்டா உங்காட்டம் காலி.
இப்ப பொறங்கையில இருக்கற கல்ல அப்படியே வீசி புடிக்கொணும். இப்ப உங்க உள்ளாங்கையி கீழ நெலத்தப் பாத்துத்தான் இருக்கொணும். அதாவது வீசுன கல்ல சொக்கிப் புடிக்கோனும். இதுல ரொம்ப முக்கியம் வீசுன கல்ல எல்லாம் புடிக்கொனும். அதனாலதான் மொதல்ல கொஞ்சமா கல்லப் புடிக்கோணுங்கறது.

5.7: ‘சித்திராங்கி'

புடிச்சகல்லயெல்லாம் சிணுக்கு ஆட்டமாரியே மறுபடியும் வெளையாடொணும்.

5.8: 'முத்துமால'

இதுவும் சித்திராங்கி மாரியேதான்.

5.9: 'காட்டங்கருங்கல்'

அஞ்சு கல்லையும் எடுத்து வீசி பொறங்கையில புடிச்சு, எதிராளிய புடிச்ச கல்லுல ஏதோன்ன தொடச்சொல்லோனும். எந்தக் கல்லத் தொடறாங்களோ அந்தக் கல்லப் சொக்கிப்பொட்டு புடிக்கொனும். எதிராளி வெவரமானவனா இருந்தா புடிக்க முடியாத ஒரு கல்ல தொடுவாங்க. நீங்க இன்னும் வெவரமா ஒரே ஒரு கல்ல மட்டும் புடிக்கலாம். ஆனா ஆட்டத்தோட தொடக்கத்திலேயெ இது ஒத்துக்கப்படுமா படாதான்னு பேசி முடிவு பண்ணிக்கறது நல்லது.

5:10: ‘பணம் பொறுக்கி'

இது அஞ்சாங்கல் ஆட்டத்தோட கடைசி, அப்புறம் இது மொதலாட்டாம் மாரியேதான். கையிலிருக்கற கல்ல வீசிப்போட்டு கீழிருக்கற கல்ல ஒவ்வொண்ணா எடுக்கறது.

இந்த ஆட்டம் வரைக்கும் யாரு மொதல்ல முடிக்கறாங்களோ அவங்கதான் ஆட்டத்துல செயிச்சவங்க...


ரெண்டாவது வெளையாட்டு:

2)அச்சாங்கல்:

இந்தாட்டம் அஞ்சாங்கல் ஆட்டத்தோட இன்னொரு மாதிரி. நாலு கல்லுக சேந்தா ஒரு ‘அச்சு'

தேவையான விளையாட்டுப் பொருட்கள்: குறைந்தது 16+1 கற்கள் (4 அச்சு + 1 தாச்சாங்கல்).
ஆட்கள்: 2 அல்லது மேல்.

எல்லாக் கல்லயும் தூக்கிப் போட்டு போறங்கையில புடிக்கோணும். புடிச்ச கல்லயேல்லாம் அப்படியே தூக்கிப்போட்டு மறுக்கா உள்ளங்கையில புடிக்கோனும். இதுல எந்தக் கல்லையும் வுட்டறக் கூடாது.
எத்தன கல்லப் புடிக்கறீங்களோ அதையெல்லாம் அச்சு அச்சா பிரிச்சு வெச்சுக்கணும். அச்சு சேர்ரதுக்கு முன்னாடி வுட்டுட்டா அச்சு சேராத கல் எல்லாத்தயும் எதிராளிக்கு கொடுத்தடனும்.
ஒரு ஆட்டம் முடிவுல யாரு கம்மியா அச்சு சேத்தியிருகாங்களோ அவங்க எல்லாத்தயும் கொடுத்து அதிக அச்சு சேத்துனவங்க அதிகமா சேத்துனத வெச்சுக்கிட்டு மீதிய போட்டு மறுபடியும் வெளயாடனும். இப்படி யாரு எல்லா அச்சயும் எடுக்கறாங்களோ அவங்க செயிச்சவங்க.
இதுல தோத்தவங்களுக்கு பருப்புக்கலியாணம் பண்ணி அவமானப் படுத்துவதும் உண்டு.
பருப்பு கலியாணம்: ரெண்டு கையயும் பிச்சையெடுப்பது போல் வைத்து, மண்ணைப் போட்டு அதில் ஒரு சின்னக் குச்சியை நட்டு வெச்சுட்டு, எச்சையெல்லாம் துப்பி, கண்ணைக் கட்டி கொஞ்ச தூரம் கொண்டுபோய் கையிலிருக்கறதையெல்லாம் கீழே போடச் சொல்லிட்டு, தல கிறுகிறுக்க சுத்து சுத்துனு சுத்தி ஆரம்பிச்ச எடத்துக்கெ வந்து, கண் கட்ட அவுத்துட்டுட்டு, மறுபடியும் போய் அந்தக் குச்சிய கண்டுபிடிச்சு எடுத்தாரனும்.
இந்தக் கலியானத்துக்கு பயந்துட்டு ஆட்டத்துல பாதியிலேயே எந்திரிச்சு எதிராளி ஓடாமப் பாத்துகரது உங்க சமார்த்தியம்..!


<ஆட்டம் தொடரும்>

19 comments:

பழமைபேசி said...

சூர்யாக் கண்ணு கிளப்பிட்டீங்க.... ஆகா, அருமை! எனக்கு நொம்ப சந்தோசமா இருக்குது.

ILA (a) இளா said...

http://veyililmazai.wordpress.com/2006/12/28/21-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/

இன்னொன்னு இருக்கு. இல்லாத விளையாட்டே இல்லே

தங்ஸ் said...

முழுப்பரிச்சை முடிஞ்சதுக்கப்புறம் மூணு நாளு ஸ்கூலுக்குப்போகணும். என்ன வேணாலும் வெளயாடலாம். எல்லாரும் இந்தக்கல்லு வெளயாட்டு,நூத்தாங்குச்சி(10 சின்ன குச்சி,1 பெரிய குச்சி வெச்சு அலுங்காம எடுக்கறது) தான் வெளயாடுவோம்...தோத்துப்போனவங்க கைகாச்சணும்..

சரண் said...

//பழமைபேசி said...
சூர்யாக் கண்ணு கிளப்பிட்டீங்க.... ஆகா, அருமை! எனக்கு நொம்ப சந்தோசமா இருக்குது.
//

வாங்க பழமைப்பேசி.. எல்லாம் உங்களப் பாத்துக் கத்துக்கிட்டதுதான்..

சரண் said...

//இன்னொன்னு இருக்கு. இல்லாத விளையாட்டே இல்லே//

ஆமாங்க இளா... நெறயா இருக்குங்க.. எல்லாம் அழிஞ்சுக்கிட்டும் வருது... ஏதோ நமக்கு நெனப்பிலிருகரதையெல்லாம் எழுதிவெப்போம்...

சரண் said...

// தங்ஸ் said...
நூத்தாங்குச்சி(10 சின்ன குச்சி,1 பெரிய குச்சி வெச்சு அலுங்காம எடுக்கறது) தான் வெளயாடுவோம்...தோத்துப்போனவங்க கைகாச்சணும்..
//

வாங்க தங்ஸ்..

இந்த நூத்தாங்குச்சியப் பத்தித்தான் அடுத்தது எழுதலாம்னு இருந்தேன் நீங்களும் சொல்லிட்டீங்க.. நூறாயுசு உங்களுக்கு..

Sanjai Gandhi said...

ம்ம்மாடி.. எவ்ளோ விளக்கமா இருக்கு.. சூப்பர் சூர்யா.. :)

//வெங்கச்சாங்கற்கள்)//

இதில் மொழுமொழுன்னு இருக்கும் சிறு கற்கள் தான் இந்த விளையாட்டுக்கு உதவும். இதன் பெறிய கற்கள் வேறு உபயோகத்திற்கு பயன்படும். என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? :)

நாங்க வெங்கசங்கல்ன்னு சொல்வோம். :)

கிராமத்து நினைவுகளுக்கு : http://sanjaigandhi.blogspot.com :-)

Anonymous said...

அஞ்சாங்கல் விளையாட்டு எல்லாம் நானும் வெளையாடீருக்கேன்.

தேவன் மாயம் said...

நெறய விளையட்டுகள எழுதிட்டிங்க!!
பெரிய பதிவு!!!!நல்லா இருக்கு!
உங்க ஆள் பழமைபேசி இன்னி சும்மா இருக்க மாட்டாரே!!
தேவா...

சரண் said...

//பொடியன்-|-SanJai said...
ம்ம்மாடி.. எவ்ளோ விளக்கமா இருக்கு.. சூப்பர் சூர்யா.. :)
//

ரொம்ப நன்றிங்க..! இந்தப் பெருமயெல்லாம் என்ற ஆத்தாளுக்கும், ஊட்டுக்காரிக்கும் தான் சேரணும். எல்லா வெளக்கமும் அவியலுதுதானுங்க..!


//இதில் மொழுமொழுன்னு இருக்கும் சிறு கற்கள் தான் இந்த விளையாட்டுக்கு உதவும். இதன் பெறிய கற்கள் வேறு உபயோகத்திற்கு பயன்படும். என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? :)
//

பெரிய கல்லுன்னா, கை சைசு இருக்கறத்தான சொல்றீங்க?

சரண் said...

//சின்ன அம்மிணி said...
அஞ்சாங்கல் விளையாட்டு எல்லாம் நானும் வெளையாடீருக்கேன்.
//

வாங்க அம்மிணி...
இதே மாரிதான் வெளையாடுவீங்களா? இல்ல வேற மாத்தம் எதாவது இருக்கா?

சரண் said...

//thevanmayam said...
நெறய விளையட்டுகள எழுதிட்டிங்க!!
பெரிய பதிவு!!!!நல்லா இருக்கு!
உங்க ஆள் பழமைபேசி இன்னி சும்மா இருக்க மாட்டாரே!!
//

வாங்க தேவா..

அவரு எந்நிக்குங்க 'சும்மா' இருந்தாரு.. எத்தனயோ படிக்கிறாரு.. எவ்வளவோ எழுதராரு..

எல்லா நம்ப நல்லதுக்குத்தானுங்களே..

Sanjai Gandhi said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

என் கேள்விக்கு யாருமே பதில் சொல்லலை.. :(

இங்க வெங்கசங்கற்களை அறைத்து தான் ”மொகுதூள்” எனப்படும் கோலப் பொடியை தயாரிப்பார்கள்.

இப்போது இதை பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை. மார்கழி மாதத்தில் தினமும் வாசல் முழுதும் மிகப் பெரிய கோலங்கள் ( தமிழ் கோலம், இங்கிலிஷ் கோலம்) போடுவார்கள். அதற்காக அருகில் இருக்கும் மொகுதூள் ஃபேக்டரிக்கு போய் வாங்கி 10 , 15 கிலோ மொகுதூள் வாங்கி வருவோம்.

சரண் said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

என் கேள்விக்கு யாருமே பதில் சொல்லலை.. :(
//

கோச்சுக்காதீங்க சஞ்சய்..!!!

//
இங்க வெங்கசங்கற்களை அறைத்து தான் ”மொகுதூள்” எனப்படும் கோலப் பொடியை தயாரிப்பார்கள்.

இப்போது இதை பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை. மார்கழி மாதத்தில் தினமும் வாசல் முழுதும் மிகப் பெரிய கோலங்கள் ( தமிழ் கோலம், இங்கிலிஷ் கோலம்) போடுவார்கள். அதற்காக அருகில் இருக்கும் மொகுதூள் ஃபேக்டரிக்கு போய் வாங்கி 10 , 15 கிலோ மொகுதூள் வாங்கி வருவோம்.//

அருமையான தகவலுங்க.. எனக்கும் உங்ககிட்ட இருந்துதான் இந்த தகவலே தெரிஞ்சது.. நாங்களும் கோலப்பொடியெல்லாம் நெரயா வாங்கியிருக்கோம்.. ஆனா அப்பெல்லாம் எதிலிருந்து தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டதில்ல..

நொம்ம்ப நன்றிங்க..!!!

நான் நரேந்திரன்... said...

ஏனுங், கூழாங்கல்லும் வெங்குசாங்கல்லும் ஒண்ணுங்களா?

சரண் said...
This comment has been removed by the author.
சரண் said...

//Naren said...
ஏனுங், கூழாங்கல்லும் வெங்குசாங்கல்லும் ஒண்ணுங்களா?
//

இல்லிங்.. கூழாங்கல் நல்லா மொழுமொழுன்னு இருக்குங்.. வெங்கசங்கல் கொஞ்ச சொறுசொறுன்னு இருக்குங்.. அதனால அச்சாங்கல் வெளையாடரப்ப சுலுவா எடுக்கலாங்.. வழுக்கிட்டு கிழுக்கிட்டு போவாதுன்னு வெய்யுங்ளே...

நான் நரேந்திரன்... said...

ஓக்கே...ரைட்டு

Karthikeyan G said...

அருமை! எப்படிங்க இப்படி.. பின்றீங்க.. சூப்பர்.. தொடரவும்..